Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அமைச்சக உயர் அதிகாரிகள் ஸ்மார்ட்போன் உபயோகிக்க தடை

மத்திய அமைச்சக அதிகாரிகள் ஸ்மார்ட்போன்கள் உபயோகிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக செயல்படும் ஒரு சில நாடுகள் மத்திய அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்களை திருடி உளவு பார்ப்பதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கணினி தகவல்களை திருடி ஒரு நாட்டை உளவு பார்ப்பது, சர்வதேச நாடுகளுக்கு தற்போது பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில், இந்தியாவுக்கு நேரடியாக ஆபத்து விளைவிக்கும் வகையில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் மூலம் ஆவணத் திருட்டு அச்சுறுத்தல் நம் நாட்டிற்கு மிக அதிகமாக உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் இந்த முறைகேடான செயல்களில் அதிக அளவில் ஈடுபடுகின்றன. அரசு அலுவலகங்களின் இணையதளங்களை முடக்கி தகவல் சேகரிப்புகளை இந்த நாடுகள் அறிந்து கொள்கின்றன.
சமீபத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் மத்திய அமைச்சக தகவல்கள் திருடப்படவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதில் அரசு உயர் அதிகாரிகளின் ஸ்மார்ட்போன்களின் வழியாகவும் தகவல்கள் திருடப்படும் அபாயம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மத்திய அமைச்சகங்களில் பணிபுரியும் மத்திய அரசு உயர் அதிகாரிகள் பணியின்போது ஸ்மார்ட் போன்கைளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்களில் உள்ள அப்ளிகேஷன்களை பயன்படுத்தி முக்கிய தகவல்களை பாகிஸ்தானும், சீனாவும் தெரிந்து கொள்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்பு துறை உள்பட முக்கிய துறை அதிகாரிகள் இந்த உத்தரவை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அலுவலக கணினிகளில் ஸ்மார்ட் போன்களை இணைத்து பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive