Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'ஸ்மார்ட் கார்டு' வடிவில் லைசென்ஸ் கிடைக்குமா?

         ' தமிழகத்தில், டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம் போன்றவற்றை, 'ஸ்மார்ட் கார்டாக' விரைவில் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
 
            தமிழகம் உட்பட, நாடு முழுவதும், 18 கோடி பேர் டிரைவிங் லைசென்ஸ் வைத்துள்ளனர். இதில், '5.4 கோடி பேர், போலி டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கின்றனர்; அதிகரிக்கும் சாலை விபத்துகளுக்கு இதுவே காரணம்' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், 
சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தது.
இதற்கு தீர்வாக, டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு சான்றிதழான ஆர்.சி., புத்தகம் போன்றவற்றை, 'ஸ்மார்ட் கார்டு' ஆக வழங்க வேண்டியது அவசியம். இதன் மூலம், போலிகளை தடுக்க முடியும். தமிழகத்தில், 81 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்; 60 பகுதி அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், சென்னை - திருவான்மியூர், கடலுார், சிவகங்கை ஆகிய, மூன்று ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் மட்டுமே, இது முன்னோடி திட்டமாக செயல்படுகிறது.
ஐந்து ஆண்டுகளாகியும், மற்ற ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படவில்லை. குறிப்பாக, 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் நிறுவனம் தொடுத்த வழக்கு தொடர்பாக, இந்த பணியில் சிக்கல் ஏற்பட்டது.
புதிய, 'டெண்டர்' வெளியிட்டு, தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய, போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், இது தொடர்பான நடவடிக்கை துவங்கவில்லை. போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது புதிய ஆட்சி வந்துள்ளது. இனி தான், இதுகுறித்து உயரதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்க உள்ளோம்' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive