Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இங்கிலீஷ் மீடியத்தில் சேர ’சம்திங்’; ஆசிரியர்களுக்கு ’மெமோ’


அரசு பள்ளியில், ஆங்கில வழிக்கல்விக்கு பணம் வசூலித்த மூன்று தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, திருப்பத்துார் மாவட்ட கல்வி அலுவலர், மெமோ அனுப்பியுள்ளார்.


வேலுார் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பிரிவில் சேர, ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதாக, கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விசாரணை நடத்தினர். 
இதையடுத்து, பணத்தை திருப்பி ஒப்படைக்குமாறு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் அதை கண்டுக்கொள்ளாமல், பணம் வசூலிப்பது தொடர்ந்தது.
காட்பாடி, காங்கேயநல்லுார், நாட்றம்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில், நேற்று முன்தினம், திருப்பத்துார் கல்வி மாவட்ட அதிகாரி அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இதில், பணம் வசூலித்தது உண்மையென தெரியவந்தது. இதுதொடர்பாக, விளக்கம் கேட்டு மூன்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மெமோ வழங்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive