Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதார் எண் இணைப்புக்காக வரும் ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்: வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுரை

        ஆதார் எண்ணை, தங்கள் வங்கிக் கணக்குடன் இணைப்பதற்காக வங்கிக் கிளைகளுக்கு வருகை தரும் ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.

 இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் மேலும் தெரிவித்ததாவது: ஓய்வூதியர்களின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாம்களின் மூலம் அதிகமான ஓய்வூதியர்கள் பலனடைவர் என்று நம்பப்படுகிறது.

 எனவே சிறப்பு முகாம்களுக்கு வரும் ஓய்வூதியர்கள், ஓய்வூதிய பட்டுவாடா ஆணை எண், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். சிறப்பு முகாம் குறித்த தகவல், நாட்டின் தொலைதூரத்தில் வசிக்கும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களை சென்றடையும் வகையில் வானொலிகள், துண்டுப்பிரசுரங்கள், உள்ளூர் கேபிள் டிவி நிறுவனங்கள் மூலம் தெரியப்படுத்தப்படும்.
 எனவே வங்கிகளும், ஆதார் எண்ணை இணைக்க வரும் ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் அவர். வயதான, நோயுற்ற ஓய்வூதியர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியர்களின் நலன் கருதி, அவர்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கும் திட்டமான "ஜீவன் பிரமாண்' திட்டம், மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறையால் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, ஓய்வூதியர் வாழ்வுறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் வங்கிக்கு நேரடியாகச் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே கணினி மற்றும் மடிக்கணினி மூலம் சமர்ப்பிக்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive