Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5 ஆண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு:ஜூலை 15-இல் தொடக்கம்

         ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 15-ஆம் தேதி தொடங்குகிறது.
 
        இளநிலை சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பங்கள் விநியோகித்து முடிக்கப்பட்டு விட்டன. அடுத்த ஓரிரு தினங்களில் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது.
இதுபோல், 7 அரசுக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு பி.ஏ.,எல்.எல்.பி., மூன்றாண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. 5 ஆண்டு படிப்புக்கான, பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30 கடைசித் தேதியாகும். இதற்கான கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் ஜூலை 15-இல் தொடங்க உள்ளது.
மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 15ஆம் தேதி கடைசியாகும். இதற்கான கலந்தாய்வு தேதி, பல்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive