Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு:ஜூன் 30இல் மேல்முறையீட்டு மனுக்கள் மீது இறுதி விசாரணை

        கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஜூன் 30-ஆம் தேதி தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 
          தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16- ஆம் தேதி நடைபெற்ற தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் பள்ளித் தாளாளர், தலைமையாசிரியர் உள்பட 10 பேருக்கு சிறை தண்டனை விதித்தும், தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் தொடக்கக் கல்வி அலுவலர் உள்பட 11 பேரை விடுதலை செய்தும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 2014-இல் உத்தரவிட்டது. இந்நிலையில் கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி பள்ளித் தாளாளர் உள்பட 10 பேர் தரப்பிலும், 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இறுதி கட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தை ஜூன் 24-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஜூன் 30-ஆம் தேதி தொடங்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive