Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலை-அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி:சென்னை பல்கலை. ஆட்சிமன்றக் குழு ஒப்புதல்

         கலை, அறிவியல் படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையடுத்து, இடங்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 20 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

மென்பொருள் நிறுவனங்களும், பி.பி.ஓ. நிறுவனங்களும் குறைந்த ஊதியத்துக்குப் பணிக்கு வரக் கூடிய கலை-அறிவியல் பட்டதாரிகளைப் பணிக்குத் தேர்வு செய்வதை கடந்த சில ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றன.
இதனால், 2011-ஆம் ஆண்டு முதல் கலை- அறிவியல் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், 2015-ஆம் ஆண்டில் பிளஸ் 2 முடித்து பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் பலர் அந்தப் படிப்பை உதறிவிட்டு, கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். இதையடுத்து, மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகத்திடம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள கலை-அறிவியல் கல்லூரிகள் 2015-இல் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, 20 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள பல்கலைக்கழகம் அனுமதித்தது.
இதுபோல, நிகழாண்டும் பி.காம்., பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. இயற்பியல் உள்ளிட்ட படிப்புகளில் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள கல்லூரிகள் அனுமதி கோரின. இதற்கு திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
இதுகுறித்து பதிவாளர் டேவிட் ஜவஹர் கூறியது:-
சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் இப்போதுள்ள இடங்களில் 10 சதவீத அளவுக்கும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீத அளவுக்கும், அரசுக் கல்லூரிகளில் 20 சதவீத அளவுக்கும் இடங்களை உயர்த்தி மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கிறது.
யுபிஏ-2 நிதி பரிந்துரைகளை ஆய்வு செய்ய குழு: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஆற்றல்சார் பல்கலைக்கழகம் (யுபிஏ-2) திட்டத்தின் இரண்டாம் தவணைத் தொகையாக ரூ.75 கோடி பெறுவதற்கான பரிந்துரைகளை ஆராய்வதற்கு ஆட்சிமன்றக் குழு ஒப்புதலுடன் திலகராஜ், கோபாலகிருஷ்ணன் ஆகிய 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அளிக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்த பிறகு, அது யுஜிசிக்கு அனுப்பப்பட்டு யுபிஏ-2 நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் டேவிட் ஜவஹர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive