Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

  10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், செய்முறை வகுப்பில் பதிவு செய்யலாம்.

வரும் மார்ச் 2017ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள அனைத்து வகை தனித்தேர்வர்களும் அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சி வகுப்பில், தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்திராதேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: 2016-2017 ஆம் கல்வி ஆண்டு, மார்ச் 2017-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும், முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள், ஏற்கனவே 2012-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் மற்றும் புதிய பாடத் திட்டத்தில் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு இந்நாள்வரை பெயர் பதிவு செய்திராத தனித் தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து தனித் தேர்வர்களும் ஜூன் 2016, 08-ஆம் தேதி முதல் ஜூன் 2016, 30க்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில், தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 சதவீத வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறைத் தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும். செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத தேர்வரின் விண்ணப்பம் 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் மார்ச் 2017-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 8, 2016 முதல் ஜூன் 30, 2016 வரை பதிவிறக்கம் செய்து,விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் 30.06.2016க்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive