Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விரைவில் அனைத்து பள்ளிகளிலும் யோகா கட்டாயமாகிறது.

         அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும்,இந்த உத்தரவு வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வர உள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யாசோ நாயக் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நாயக் கூறுகையில்,அனைதஅது பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்படவேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கைஒன்றை அனுப்பி உள்ளது.வரும் கல்வி ஆண்டு முதலே இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வரலாம். அதே சமயம் யோகா கட்டாயமாக கற்பிக்கப்படாது. மாணவர்கள் விரும்பினால் அதை கற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால்,அந்த சமயத்தில் உடற்பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படும்.போலீசார் அனைவருக்கும் யோகா கட்டாயமாக்கப்பட உள்ளது. பாதுகாப்புத்துறை வீரர்களுக்கும் இது கட்டாயமாக்கப்படுவது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது.

 போலீஸ் படையினருக்கு வழங்கப்படும் யோகா பயிற்சிக்கு,போலீஸ் யோகா பயிற்சி என பெயரிடப்பட உள்ளது.கடந்த ஆண்டு ஜூன்21ம் தேதி முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.இந்தியா மட்டுமின்றி192நாடுகளிலும் இது கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ஜூன்21ம் தேதியன்று2வதுசர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive