Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அமைச்சருக்காக "ஹெலிபேட்' அமைக்க தண்ணீர் வீண்

                   மகாராஷ்டிர மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், அந்த மாநில அமைச்சரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான இடத்தை (ஹெலிபேட்) அமைப்பதற்கு 10ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   
                 மகாராஷ்டிரத்தின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள லாத்தூர் மாவட்டத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில், லாத்தூர் மாவட்டத்தில் நிலவும் வறட்சி குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே, பெல்குண்ட் எனும் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார். முன்னதாக, அவரது ஹெலிகாப்டர் அந்தக் கிராமத்தில் தரையிறங்குவதற்காக 10ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு ஹெலிபேட் அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 மேலும் ஒரு தண்ணீர் ரயில்: இதனிடையே, மராத்வாடா பிராந்தியத்துக்கு 27 லட்சம் லிட்டர் தண்ணீருடன் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ரயில் ஒன்று வெள்ளிக்கிழமை புறப்பட்டது.
 முன்னதாக, 3 சிறப்பு ரயில்கள் மூலம் ராஜஸ்தானிலிருந்து மராத்வாடா பிராந்தியத்துக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive