Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவராக பங்கேற்க தடை.

          விளையாட்டு போட்டிகளில் நடுவராக பங்கேற்க, தலைமை ஆசிரியர்கள் சிலர் தடை விதிப்பதாக, உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 
          விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், அவ்வப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், நடுவர்களாக பணி அமர்த்தப்படுவர்.


இதற்கு, முதன்மை கல்விஅலுவலரின் அனுமதி பெற்று, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மூலம், பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். நடுவராக பணியாற்றுவதற்கு, தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்படுகிறது.பெரும்பாலான பள்ளிகளில், விளையாட்டு போட்டியில் பங்கேற்க, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது. ஒரு போட்டியை நடத்தி முடிக்க, குறைந்தது ஏழு நடுவர்கள் தேவை என்ற நிலையில், நான்கு முதல் ஐந்து உடற்கல்வி ஆசிரியர்களே பணி அமர்த்தப்படுகின்றனர். இது, போட்டி ஏற்பாடுகள், முடிவுகளை பாதிக்கிறது.

உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, தலைமை ஆசிரியர்கள் சிலர் தடையாக உள்ளனர். இதன் காரணமாக, போட்டிகள் ஒவ்வொன்றும், முறையாக நடத்தி முடிக்கப்படுவதில்லை. முழு நேரமும் படிக்க வேண்டும் என மாணவ, மாணவியர் கண்டிப்புக்கு உள்ளாவதால், விளையாட்டில் ஆர்வம் கொள்வோர் பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive