Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் - திமுக

திமுக தேர்தல் அறிக்கை 2016 - முக்கிய அம்சங்கள்

         2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து திமுக தலைவர் கருணாநிதி ஞாயிறன்று 72 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
இதில் மதுவிலக்குச் சட்டம் நடைமுறைப்படுத்தும் என்பதை முதலில் அறிவித்தார்.பிறகு விவசாயத்துக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, துரைமுருகன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மதுவிலக்கை அமல்படுத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்,.மதுவிற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும்.

*மதுவிலக்கு இழப்பை ஈடுகட்ட உரிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.

*டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு.

*மதுவுக்கு அடிமையானோருக்கு சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு.

*விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை மற்றும் சிறு, குறு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

*ஏரிகளைத் தூர்வார ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*வெள்ளத்தினால் ஏற்படும் சேதத்தை தடுக்க ரூ.5,000 கோடி.

*அனைத்து ரக விதை நெல்லுக்கும் முழு மானியம்.

*மகளிருக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு அளிக்கப்படும்.

*கல்விக் கடன் தள்ளுபடிஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும்.

*மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்.

*பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியருக்குக் ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும்.

*ஆட்டோ வாங்குவதற்கு அரசு ரூ.10,000 மானியம் வழங்கும்.

*முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும்.

*பட்டதாரிப் பெண்கள் கலப்புத் திருமண உதவித் தொகை ரூ.60,000 மற்றும் 4 கிராம் தங்கம்.

*அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

*நெசவாளர் வீடுகட்ட ரூ.3 லட்சம் மானியம் அளிக்கப்படும்.மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

*மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

*படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

*முதியோருக்குக் கட்டணமில்லா பயணச் சலுகை.தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.

*விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

*நெல்கொள்முதலுக்கு ஆதார விலை ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு ரூ.2,500 வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

*தந்தை பெரியார் பிறந்தநாள் பகுத்தறிவு தினமாக கொண்டாடப்படும்.

*பட்டாதாரிகள் சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

*100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும்.

*அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைக்கப்படும்.

*ஏழை மக்கள் வசதிக்காக அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்.

*விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு போன்ற குடும்ப அட்டை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

*மதுரை முதல் தூத்துகுடி வரை தொழிற்சாலைகள் நிரம்பிய நெடுஞ்சாலை.

*மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை.

*அனைத்து மாணவர்களுக்கும் 3ஜி/4ஜி இணையதள வசதி செய்து தரப்படும்.

*மீனவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும்.

*தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும்.

*சென்னையை அடுத்த வண்டலூரில் துணை நகரம் அமைக்கப்படும்.

*நியாயமான விலையில் மணல் விற்பனை செய்யப்படும்.

*அரசுப்பள்ளிகளில் உள்ள 54,233 வேலைக்காலியிடங்கள் நிரப்பப்படும்.

*வசதியில்லாதவர்களுக்கு சலுகை விலையில் கைபேசி வழங்கப்படும்.

*ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

*கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.

*ஊரக வேலைவாய்ப்புக் கூலி ரூ.100லிருந்து ரூ.150ஆக அதிகரிக்கப்படும்.

*தொடக்கப்பள்ளி சத்துணவில் பால் சேர்க்கப்படும்.

*பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.

*பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

*வெள்ளத்தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.
The Hindu
2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து திமுக தலைவர் கருணாநிதி ஞாயிறன்று 72 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் மதுவிலக்குச் சட்டம் நடைமுறைப்படுத்தும் என்பதை முதலில் அறிவித்தார்.

பிறகு விவசாயத்துக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, துரைமுருகன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மதுவிலக்கை அமல்படுத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்,.

மதுவிற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும்.

மதுவிலக்கு இழப்பை ஈடுகட்ட உரிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு.

மதுவுக்கு அடிமையானோருக்கு சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு.

விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை மற்றும் சிறு, குறு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

ஏரிகளைத் தூர்வார ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வெள்ளத்தினால் ஏற்படும் சேதத்தை தடுக்க ரூ.5,000 கோடி.

அனைத்து ரக விதை நெல்லுக்கும் முழு மானியம்.

மகளிருக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு அளிக்கப்படும்.

கல்விக் கடன் தள்ளுபடி

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும்.

மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்.

பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியருக்குக் ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும்.

ஆட்டோ வாங்குவதற்கு அரசு ரூ.10,000 மானியம் வழங்கும்.

முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும்.

பட்டதாரிப் பெண்கள் கலப்புத் திருமண உதவித் தொகை ரூ.60,000 மற்றும் 4 கிராம் தங்கம்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

நெசவாளர் வீடுகட்ட ரூ.3 லட்சம் மானியம் அளிக்கப்படும்.

மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

முதியோருக்குக் கட்டணமில்லா பயணச் சலுகை.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.

விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

நெல்கொள்முதலுக்கு ஆதார விலை ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு ரூ.2,500 வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தந்தை பெரியார் பிறந்தநாள் பகுத்தறிவு தினமாக கொண்டாடப்படும்.

பட்டாதாரிகள் சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும்.

அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைக்கப்படும்.

ஏழை மக்கள் வசதிக்காக அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு போன்ற குடும்ப அட்டை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

மதுரை முதல் தூத்துகுடி வரை தொழிற்சாலைகள் நிரம்பிய நெடுஞ்சாலை.

மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை.

அனைத்து மாணவர்களுக்கும் 3ஜி/4ஜி இணையதள வசதி செய்து தரப்படும்.

மீனவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும்.

தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும்.

சென்னையை அடுத்த வண்டலூரில் துணை நகரம் அமைக்கப்படும்.

நியாயமான விலையில் மணல் விற்பனை செய்யப்படும்.

அரசுப்பள்ளிகளில் உள்ள 54,233 வேலைக்காலியிடங்கள் நிரப்பப்படும்.

வசதியில்லாதவர்களுக்கு சலுகை விலையில் கைபேசி வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.

ஊரக வேலைவாய்ப்புக் கூலி ரூ.100லிருந்து ரூ.150ஆக அதிகரிக்கப்படும்.

தொடக்கப்பள்ளி சத்துணவில் பால் சேர்க்கப்படும்.

பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.

பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

வெள்ளத்தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.  

Dinamalar


சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்; 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்; அனைத்து மாணவர்களுக்கும், 3ஜி / 4ஜி இணையதள வசதி உள்ளிட்ட ஏராளமான சலுகை அறிவிப்புகளை, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அத்துடன், மதுவிலக்கை அமல்படுத்த தனிச்சட்டம் இயற்றப்படும் என, உறுதி அளித்ததோடு, இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடாததால், சபாஷ் பெற்றுள்ளது.

தமிழகத்தில், மே, 16ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை, சென்னை அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.அப்போது பேசிய கருணாநிதி, ''தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் நிறைவேற்ற, தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,'' என்றார்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:*மது விலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றப்படும்*'லோக் ஆயுக்தா' சட்டம் கொண்டு வரப்படும்*சேவை உரிமை சட்டம் நிறைவேற்றப்படும்*வேளாண்மைக்கென தனி நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும்*சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் *நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவின்டால் ஒன்றுக்கு, 2,500 ரூபாய் வரை வழங்கப்படும்*கரும்பு, டன் ஒன்றுக்கு, 3,500 ரூபாய் வழங்கப்படும்*மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து உள்ள, அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு தரப்படும்*விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களும் ஆண்டுதோறும் வேட்டி, சேலையுடன் *பொங்கல் பரிசு, 500 ரூபாய் வழங்கப்படும்*100 நாள் வேலை திட்டத்தில், விவசாய பணிகளுக்கு மேலும், 50 நாட்கள் சேர்த்து, 150 நாட்கள் என, புதிய சட்டம் இயற்றப்படும்
*கிருஷ்ணகிரியில், தோட்டக்கலை பல்கலைக்கழகம் நிறுவப்படும்*நீர்ப்பாசன துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும்*2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 200 தடுப்பணைகள் கட்டப்படும்*சென்னை பெருநகர் வெள்ள தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்**மீனவர்களுக்காக, ஐந்து லட்சம் வீடுகள் கட்டப்படும்*மீனவர் சமுதாயத்தினர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர்*மீன்பிடி தடைக்கால நிவாரணம், மழை - வெள்ள நிவாரணம், 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்*தனி ஜவுளி ஆணையம் நிறுவப்படும்*கைத்தறி நெசவாளர்களுக்கு, 200 யூனிட்இலவசமின்சாரம் தரப்படும்*விசைத்தறிகளுக்கு, 750 யூனிட் இலவச மின்சாரம் உண்டு*ஆட்டோ ஓட்டுனர் சொந்தமாக ஆட்டோ வாங்கிட, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்*புதிய கல்வி கவுன்சில் நிறுவப்படும்கல்வி கடன் தள்ளுபடி*மாணவர்களின் கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்அனைத்து மாணவர்களுக்கும், 3ஜி / 4ஜி இணையதள வசதி தரப்படும்*கலந்தாய்வு முறையில் தேர்வு செய்யப்பட்டு, கட்டணம் செலுத்த முடியாத, ஏழை - எளிய மாணவர்களுக்கு, தொழில் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்*அரசு துறைகளில் காலியாக உள்ள, மூன்றரை லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்*படித்து விட்டு, வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் உதவி தொகை தரப்படும்சர்க்கரை ஆலைகளில், 10 சதவீத, 'எத்தனால்' உற்பத்தி செய்யப்படும்*மதுரை முதல் துாத்துக்குடி வரை மற்றும் சென்னை முதல் ஓசூர் வரை தொழிற்சாலைகள் நிறைந்த நெடுஞ்சாலை அமைக்கப்படும்*மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வரும்*15 நாட்களில், புதிய குடும்ப அட்டைகள், 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் தரப்படும்*நியாய விலை கடைகளில், மாதத்தின் அனைத்து நாட்களிலும் பொருட்கள் வழங்கப்படும்*மகளிருக்கு, 9 மாத பேறுகால விடுமுறை தரப்படும்*கருவில் இருக்கும் குழந்தைக்கும், தாய்க்கும் காப்பீடு உண்டு*திருமண உதவித் தொகை, 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு, 4 கிராம் தங்கம் வழங்கப்படும்
Advertisement
*பேறுகால உதவித் தொகை, 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்*மாற்றுத்திறனாளிகளுக்கு, கட்டணமில்லா பயண சலுகையுண்டு*மதுரை, துாத்துக்குடி, திருச்சியில் வர்த்தக மையங்கள் அமைக்கப் படும்*கோவில் நிலங்களை பாதுகாக்க, நில வங்கி ஏற்படுத்தப்படும்*முக்கிய கோவில்களின் தேரோடும் வீதிகள், கான்கிரீட் வீதிகளாக மாற்றப்படும்*கிராம கோவில் பூஜாரிகளின் ஊதியம், ஓய்வூதியம் உயர்த்தப் படும்*பயணிகள் பேருந்துகளில், ஜி.பி.எஸ்., வசதி அறிமுகம் செய்யப்படும்*திருச்சி, மதுரை, கோவையில், 'மெட்ரோ' ரயில் சேவை துவக்கப்படும்*ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளா பந்தயம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்*மீண்டும், 'நமக்கு நாமே' திட்டம் நடைபெறும்*மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க வகை செய்யப்படும்*ஒற்றை சாளர முறையில், 60 நாட்களில், கட்டட அனுமதி தரப்படும்சிறப்பு வகை கைபேசிகள் வாங்க வசதியற்றவர்களுக்கு, அரசு செலவில் கைபேசிகள் தரப்படும்*பொது இடங்கள் அனைத்திலும், தகவல் தொடர்புக்காக, 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்கள், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இலவச அறிவிப்புகள் இல்லை:கடந்த, 2006 தேர்தலின் போது, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும், 'டிவி' என, இலவசத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது. அதன் பின், 2011ல், அ.தி.மு.க., இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாடு, ஆடு என, இலவச அறிவிப்புகளை அள்ளி வீசியது.
இதனால், தேர்தல் அறிக்கை என்றால், அதில் இலவசம் கட்டாயம் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்த முறை, தி.மு.க., சார்பில், வாஷிங் மிஷின், பிரிஜ் என, இலவசங்கள் இருக்கும் என, தகவல் பரவியதால், அதை விட கூடுதலாக அறிவிப்பு களை வெளியிட, அ.தி.மு.க., தரப்பு தயாராக இருந்தது.
அதற்காகவே, 'தி.மு.க., தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடட்டும்' என, அ.தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையை தள்ளி போட்டு வருகிறது. ஆனால், அ.தி.மு.க.,வினரே ஆச்சரியம் அடையும் வகையில், இலவச அறிவிப்பு இல்லாமல், தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Dina Thandhi
 தமிழக சட்டமன்ற தேர்தல் மே 16–ந் தேதி நடக்கிறது.
தி.மு.க. கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் 41 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா 5 இடங்களிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப்படை, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.
தி.மு.க. 176 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
தேர்தல் அறிக்கை தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தேர்தல் அறிக்கை முழுமை பெற்றதை தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை தேர்தல் அறிக்கை குழுவினர் சந்தித்து, தேர்தல் வரைவு அறிக்கையை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கவிஞர் கனிமொழி எம்.பி. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.
கருணாநிதி வெளியிட்டார் தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டார். அதை பொதுச்செயலாளர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார். ஒட்டு மொத்தமாக ஒரு தேர்தல் அறிக்கையும், மாவட்டம் வரியாக ஒரு தேர்தல் அறிக்கையும் என 2 தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. தேர்தல் அறிக்கை 141 பக்கங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–
* மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்கு ஏற்ற வண்ணம் அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான அரசியல் நடவடிக்கைகளை மத்திய அரசு முழு ஈடுபட்டுடன் மேற்கொள்ள வேண்டும்.
* மத்திய அரசு பணிகளுக்கும், மத்திய பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நடைபெறும் பணியாளர்கள் தேர்வுக்கும் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி மொழிகளாக உள்ள மொழிகளையும் இணைத்து எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகளை நடத்த வேண்டும்.
மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் * மத்திய அலுவலங்களில் தமிழ் ஆட்சி மொழி.
* உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்.
* உலகெங்கிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.
* உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்ற கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். பூங்காக்கள் சீரமைக்கப்படும்.
* நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடையே ஐ.நா. சபையின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
* தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். மதுவிலக்கை அமல்படுத்தும் நடைமுறைகளை மேற்கொள்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய உரிய திட்டங்கள் வகுக்கப்படும்.
பணியாற்ற வழிவகை * தமிழ்நாடு மாநில விற்பனை கழகம் கலைக்கப்பட்டு, இந்த விற்பனை முழுவதும் நிறுத்தப்படும். தமிழ்நாடு மாநில ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை விற்பனை வாரியம் புதியதாக உருவாக்கப்படும். ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்கள் புதிய நிறுவனத்தில் தங்கள் பதவி மூப்பினை இழக்காமல் பணியாற்ற வழிவகை செய்யப்படும். மதுபான விற்பனை செய்வதில் இருந்து அரசு முற்றிலும் விலகி, புதியதாக அமைக்கப்படும் வாரியத்தின் மூலம் மாவட்டங்கள்தோறும் தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட காய்கறிகளை மட்டும் விரிவுபடுத்தப்பட்ட சந்தைகள் உருவாக்கப்பட்டு நெல், வாழை, மஞ்சள், கடலை, மிளகாய், பயறு வகைகள் வேளாண் விளை பொருட்கள், கைத்தறி துணிகள் கைவினை பொருட்கள் முதலிய கிராம உற்பத்தி பொருட்களை பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* மதுவுக்கு அடிமையானவர்கள் மதுபழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒரு அமைப்பு உருவாக்கப்படும். மது பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு உரிய மனநல பயிற்சியும், சிகிச்சைகளும் வழங்கப்படும்.
பொருளாதார வளர்ச்சி வாரியம் * லோக் ஆயுக்தா சட்ட அமைப்பு உருவாக்கப்படும்.
* சேவை உரிமை சட்டம் நிறைவேற்றப்படும்.
* நிதி இழப்பை சமாளிக்க முதல்–அமைச்சருக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கின்ற தனி அதிகாரம் பெற்ற பொருளாதார நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்.
* வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பதற்காக பல்துறை சார்ந்த வல்லுனர்களை கொண்ட நிர்வாக சீர்திருத்தகுழு அமைக்கப்படும்.
* மாநில பொருளாதார வளர்ச்சி வாரியம் உருவாக்கப்படும். துறைவாரியாக திட்ட குழுக்கள் அமைக்கப்படும். மக்கள் தொகை, சட்டப்பேரவை தொகுதிகளின் அடிப்படையில் வருவாய் மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்படும்.
பயிர்க்கடன் தள்ளுபடி * சிறு, குறு, விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.
* நெல்லுக்கு ஆதார விலை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும். கரும்பு டன்னுக்கு 3,500 வழங்கப்படும்.
* இயற்கை வேளாண்மைக்கு வேளாண்துறையில் தனியே ஒரு பிரிவு உருவாக்கப்படும். நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் தொடங்கப்படும்.
* மன்னவனூரில் அரசியிடம் இருக்கும் 390 ஏக்கர் நிலத்தில் மண்டல தோட்டக்கலை ஆய்வு மையம் உருவாக்கப்படும்.
* விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலவரைக்குள் மின் இணைப்பு.
பொங்கல் பரிசு ரூ.500 * சிறு, குறு விவசாயிகளுக்கும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் வேட்டி, சேலையுடன் பொங்கல் பரிசாக ரொக்கம் ரூ.500 வழங்கப்படும்.
* நீர்நிலைகள் பராமரிக்கப்படும்.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதுடன் கூடுதலாக 50 நாட்கள் சேர்த்து 150 நாட்கள் வேலை வழங்க புதிய சட்டம்.
* ஒவ்வொரு பகுதியிலும் பள்ளி படிப்பு முடித்த ஆண்கள், பெண்களை கொண்டு கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் குறைந்தது 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மாநிலம் முழுவதிலும் 500–க்கும் குறையாத வேளாண் தொழில்நுட்ப கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்படும். தானிய சேமிப்பு கிடங்குகள் உருவாக்கப்படும்.
* விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட வேளாண்மை உற்பத்தியை பெருக்க சட்டப்பேரவையில் வேளாண்மைக்கென்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல்.
ரூ.10 ஆயிரம் மானியம் * வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும்.
* 12–ம் வகுப்பு படித்த கிராம வேளாண் மகளிர் பங்கேற்கும் கூட்டுறவு அமைப்புகள் ஏற்படுத்தப்படும். சிறு, குறு, விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்கும்போது 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
* சொட்டு நீர் பாசனம் அமைக்க 75 சதவீதம் மானியம்.
* தேசிய உயிரியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.




5 Comments:

  1. it is fantastic manifesto given by the great politician dr kalainger who is going to be the chief minister of tamilnadu 2016. vaiko talks all unwarranted and meaningless talk.he was number one parlimentarian. now---------------?

    ReplyDelete
  2. One thing I must know whether this is a website of giving educational news or Karunanidhi manifesto.... he was the man who entirely spoiled Tamil Nadu and tamil religion on Srilanks. I had good opinion about PADASALAI.... now I am going to unsubscribe.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு. செந்தில்,

      பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் பல ஆசிரியர்களின் கனவு. அது குறித்து தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த ஒரு கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருப்பதை நிச்சயம் நமது பாடசாலையில் பதிவு செய்தாக வேண்டும். அடுத்த ஒரு மாதத்திற்கு இதுபோன்ற அரசியல் செய்திகள் அவ்வப்போது வரக்கூடும். அரசியல் அறிவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு.

      நன்றி!
      அன்புடன் - பாடசாலை.

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive