Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தலை சுமுகமாக நடத்த நவீன மொபைல் 'ஆப்'கள்

       தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை, சுமுகமாகவும், எளிதாகவும் நடத்த உதவும், 'ஆப்'களை, பீஹார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
பாட்னாவைச் சேர்ந்த, எஸ்.இ.ஆர்.பி.எல்., என்ற தனியார் நிறுவனம், மொபைல் போன்களில் பயன்படுத்தக்கூடிய வகையில், 'சமாதான், சுவிதா, சுகம்' மற்றும் பி.எம்.எப்., ஆகிய நான்கு, 'ஆப்'களை உருவாக்கி உள்ளது. இந்த 'ஆப்'கள், சட்டசபை தேர்தலை, பிரச்னையின்றி, சுமுகமாக, எளிதாக நடத்த உதவும்.
இதுகுறித்து, எஸ்.இ.ஆர்.பி.எல்., நிறுவன மேலாண்மை இயக்குனர் சஞ்சீவ்சங்கர், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி விவரம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், தேர்தலை சுமுகமாக நடத்த உதவும், 'ஆப்'களின் மூலத்தை, எங்களிடம் கேட்டுப் பெற்றுள்ளது. இதை, எங்கள் உதவியுடனோ அல்லது தாமாகவோ பயன்படுத்திக் கொள்வது குறித்து, அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகம் தவிர, அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில், தேர்தல், 'ஆப்'கள் பயன்படுத்தப்படுகின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive