Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வு அறையில் கண்காணிப்பாளர் உயிரிழப்பு

        துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மயங்கிவிழுந்ததில் இறந்தார்.
 
        பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொருளியல் தேர்வு, நேற்று காலை நடந்தது. திருச்செந்துார், செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்பாளராக, சுந்தர், 48, நியமிக்கப்பட்டு இருந்தார். இவர், உடன்குடியிலுள்ள, டி.டி.டி.ஏ., மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
காலை 9:50 மணிக்கு, மாணவர்களுக்கு வினாத்தாள்களை சரி பார்த்து வழங்கும் பணியை செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. தேர்வு அறையில் இருந்த மாணவர்கள், பக்கத்து அறையில் இருந்த தேர்வு கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக, திருச்செந்துார் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சுந்தரின் மனைவி ஸ்டெல்லா, ஜோஸ்மின் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு, மகளும், மகனும் உள்ளனர்.




1 Comments:

  1. ஆசிரியரும் மனிதர் என்பதை மறந்து 3மணி நேரம் நிற்க்க வைப்பது கொடுமை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive