ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி
அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
விதித்தது. இதையடுத்து தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜல்லிகட்டு
இந்த ஆண்டும் நடக்கவில்லை.
இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்
என்று கோரி மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி
தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை
விடுத்தனர். ஆனால் விலங்குகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தடை உத்தரவு
கோரி தொடர்ந்த மனுமீதான விசாரணையின் போது உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு
இடைக்கால தடை விதித்ததோடு மத்திய அரசின் தடை நீக்க உத்தரவு செல்லாது எனவும்
தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த
மனுவில் ஜல்லிக்கட்டு தமிழக மக்களின் கலாச்சார விழா.. மக்களின்
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டின் போது காளைகள்
துன்புறுத்தப்படவில்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...