Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாக்குப்பதிவு தினத்தன்று விடுமுறை அளிக்காவிட்டால் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்: ராஜேஷ் லக்கானி

வாக்குப் பதிவின் போது, விடுமுறை அளிக்காத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,தேர்தல் தொடர்பாக தெரிவிக்கப்படும் புகார்களை ஒரு நாளில் இருந்து அதிகபட்சம் மூன்று நாள்களுக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பணிகள் தொடர்பாக, ஆலோசனை நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் தலைமையிலான குழு தமிழகம் வருகிறது.
இந்தக் குழு இந்த வாரத்தில் மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஆலோசனை நடத்துகிறது. விரைவில் குழு தமிழகம் வரவுள்ளது. தேதி இறுதி செய்யப்படவில்லை.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் வாக்குப்பதிவு தினத்தன்று விடுமுறை விட வேண்டும். 
விடுமுறை அளிக்காவிட்டால் தேர்தல் துறையின் இணையதளம் (www.tnelections.gov.in) வழியே மின்னஞ்சல்மூலமாகப் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்தோரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். வாக்குப் பதிவின் போது, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 135 (பி) பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, தொழிலாளர் நலத் துறையின் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க கேட்டுக் கொள்ளப்படும். இதுதொடர்பாக, தனியாக கடிதங்களை அனுப்பவும் தொழிலாளர் நலத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive