ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல்
கிராமத்தில் சோனையா திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சிவராத்திரி
திருவிழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் பல இடங்களில் அதிக வெளிச்சமும்,
அதிக வெப்பமும் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. விழாவில்
பங்கேற்ற பக்தர்கள் விழா முடிந்து காலையில் வீட்டுக்கு சென்ற சிறிது
நேரத்தில் கண் உறுத்தல் ஏற்பட்டு கண்விழிப் பகுதி சிவப்பு நிறமாக
மாறியிருந்தது. உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவரும் ராமநாதபுரம் தலைமை அரசு
மருத்துவமனையில் கண் மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்றனர்.
இதில், கருவிழி பாதிக்கப்பட்ட சீதாலட்சுமி (17), ஜான்சிராணி (12), ஜெயஸ்ரீ (8), சண்முகவள்ளி (40) உள்பட 52 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவி சீதாலட்சுமி கூறுகையில், திருவிழாவுக்கு சென்றுவிட்டு வந்து, காலையில் கண் விழித்துப் பார்த்த போது கண் உறுத்தல் ஏற்பட்டு கண் சிவந்து காணப்பட்டது. மேலும், கண்களை முழுமையாக திறக்க முடியவில்லை.
கண்ணில் வலியும் ஏற்பட்டது. பிளஸ் 2 தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்ற கண்பாதிப்பு ஏற்பட்டிருப்பது மிகவும் கவலையாக இருக்கிறது என்றார்.
இதுகுறித்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டி.கே.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: வழக்கத்தைவிட குறைவான உயரத்தில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளால் அதிக வெப்பம், அதிக வெளிச்சம் மற்றும் இரவு தூங்காமல் நீண்டநேரம் கண்விழித்திருந்தது போன்ற காரணங்களால் கருவிழியின் மேலடுக்கு மட்டும் உரிந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தரமான சொட்டு மருந்து அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 52 பேரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றதாக தெரிவித்தார்.
இதில், கருவிழி பாதிக்கப்பட்ட சீதாலட்சுமி (17), ஜான்சிராணி (12), ஜெயஸ்ரீ (8), சண்முகவள்ளி (40) உள்பட 52 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவி சீதாலட்சுமி கூறுகையில், திருவிழாவுக்கு சென்றுவிட்டு வந்து, காலையில் கண் விழித்துப் பார்த்த போது கண் உறுத்தல் ஏற்பட்டு கண் சிவந்து காணப்பட்டது. மேலும், கண்களை முழுமையாக திறக்க முடியவில்லை.
கண்ணில் வலியும் ஏற்பட்டது. பிளஸ் 2 தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்ற கண்பாதிப்பு ஏற்பட்டிருப்பது மிகவும் கவலையாக இருக்கிறது என்றார்.
இதுகுறித்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டி.கே.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: வழக்கத்தைவிட குறைவான உயரத்தில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளால் அதிக வெப்பம், அதிக வெளிச்சம் மற்றும் இரவு தூங்காமல் நீண்டநேரம் கண்விழித்திருந்தது போன்ற காரணங்களால் கருவிழியின் மேலடுக்கு மட்டும் உரிந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தரமான சொட்டு மருந்து அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 52 பேரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றதாக தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...