பிகார் மாநிலத்தில் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்துக்காக இதுவரை 5000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகார் மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அனைத்து வகையான உள்நாட்டு மதுபானங்கள் விற்பனைக்கு முதல்வர் நிதிஷ்குமார் தடை விதித்துள்ளார். மேலும் பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி பிகாமர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 1,839 பேரும், மார்ச் மாதத்தில் இதுவரை 869 பேரும் பொது இடத்தில் மது அருந்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகார் மாநிலத்தில் பொது இடங்களில் மது அருந்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இதை 10 ஆண்டுகளாக உயர்த்துவதற்கு பிகார் அரசு தீர்மானித்துள்ளது என மாநில கலால் துறை அமைச்சர் அப்துல் ஜலில் மஸ்தான் கூறினார்.
இதனிடையே, பிகாரில் கள்ளச் சாராயம் விற்பவர்கள் மற்றும் காய்ச்சுவோருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். நடைபெற்று வரும் பட்ஜெட் தொடரின்போது இதற்கான மசோதா நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...