ஆந்திரம் மாநிலம்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வியாழக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது
பி.எஸ்.எல்.வி.சி. 32 ராக்கெட். இந்த ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எஃப்
செயற்கைகோளை சுமந்துச் செல்லும்.
இந்த ராக்கெட் சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இதற்கான கவுண்ட்டவுன் புதன்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தொடர்ந்து கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 5 செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ஒரு பார்வை: கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 1ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ செயற்கைகோள், பி.எஸ்.எல்.வி. சி22 ராக்கெட்டிலும், கடந்த ஆண்டு ஏப்ரல் 4ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1பி செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட்டிலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1சி, கடந்த ஆண்டு மார்ச் 28ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
கடைசியாக ஜனவரி 21 மாதம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஈ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
கடல் ஆராய்ச்சிக்காக: இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைகோள்கள்கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.
இந்த செயற்கைகோள் கார்கள், சரக்கு வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் இருப்பதை துல்லியமாக தெரிவிப்பதுடன், பயணநேரம் குறித்து சரியான தகவல்களை அளிக்கும். மேலும் பேரிடர் மேலாண்மை, செல்போன்கள் ஒருங்கிணைப்பு, புவியியல் வரைப்படங்களை கண்காணித்தல், கார், கனரக வாகன (டிரக்ஸ்) ஓட்டுனர்களுக்கு குரல்வழி மூலம் முறையாக ஓட்டச்சொல்லி வாகனங்களை இயக்க செய்ய முடியும். இது இந்தியாவுக்கான பிரத்யேக வழிக்காட்டி செயற்கைகோள். அமெரிக்காவின் ஜிபிஎஸ் போல இந்தியாவுக்கான எஸ்பிஎஸ் வழிக்காட்டியாக இந்தச் செயற்கோகோள்கள் அமையும்.
இந்த செயற்கைகோள்களின்ன் ஆயுட்காலம் 12 வருடம். இதேபோல இன்னும் ஒரு செயற்கைகோள்களை கடல் சார் ஆராய்ச்சிக்காக அடுத்த மாதம் இஸ்ரோ நிறுவனம் அனுபவுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...