Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ராமநாதபுரம் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் சம்பளம் போச்சு!!!

         ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு 10 நாட்கள் ஊதியம் வழங்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக ஊதியம் கிடைத்துள்ளது.


புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பிப்., 10 முதல் பிப்., 19 வரை நடந்தது.சட்டசபையில் 110 விதியில் அரசு ஊழியர்களுக்கு சில சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். வேலைநிறுத்த காலத்திற்கான ஊதியத்தை பிடித்தம் செய்வது தொடர்பாக அரசு எந்த உத்தரவும் பிறக்கப்படவில்லை. ஆனால் ராமநாதபுரம் கலெக்டர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரிடம் ஊதியத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டார்.இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அரசு ஊழியர்களின் 10 நாட்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டன.

அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி கூறியதாவது: வேலை நிறுத்த காலத்தையும் பணிக்காலமாக மாற்றப்படும் என, அரசு உறுதி அளித்தது. இதற்கான உத்தரவு வருவதற்கு முன்பே, ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவால் அரசு ஊதியர்களுக்கு 10 நாட்கள் ஊதியம் கிடைக்கவில்லை. அரசு உத்தரவு வந்துவிடும் என, எதிர்பார்த்தோம். அதற்குள் தேர்தல் தேதி அறிவிப்பட்டது. இதனால் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர், என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive