Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போராட்டம் தொடரும்: ஆசிரியர்கள்

           இடைக்கால நிதி நிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால், போராட்டம் தொடரும் என்று "ஜாக்டோ' (ஆசிரியர்கள்) அமைப்பினர் தெரிவித்தனர்.பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்களின் சங்கங்கள் இணைந்து "ஜாக்டோ' வாயிலாகத் தொடர் போராட்டம் நடத்திவருகிறது.


       இதன் தொடர்ச்சியாக, ஜன. 30, 31, பிப்.1-ஆம் தேதிகளில்ஜாக்டோ அமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, 9-ஆம் தேதி அமைச்சர் குழுவினருடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, இடைக்கால நிதிநிலை அறிவிப்புக்காகக் காத்திருந்தனர்.இந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகததால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 இதனால், போராட்டம் தொடரும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.மேலும், வியாழக்கிழமை கூடும் ஜாக்டோ பொதுக்குழுக் கூட்டத்தில் போராட்டத்தைத் தொடர்வது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive