Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

படியில் மாணவர்கள் பயணம்: அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஆட்சியர் கண்டிப்பு

        ஏராளமான மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு வந்த அரசுப் பேருந்தை நிறுத்திய ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், ஓட்டுநரை அழைத்து எச்சரித்து அறிவுரை கூறினார்.
          மதுரை மாட்டுத்தாவணி  நிலையத்தில் இருந்து போக்குவரத்து நகர் செல்லும் அரசு நகரப் பேருந்து தெற்குவாசல் பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்தனர். அதோடு பள்ளி மாணவர்கள், பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டு வந்தனர்.

 இந்நிலையில் அவனியாபுரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், அரசுப் பேருந்தை நிறுத்தினார். உடன் வந்த அலுவலர்கள் படியில் இருந்த மாணவர்களை இறங்கிச் செல்ல அறிவுறுத்தினர். ஓட்டுநரை அழைத்த ஆட்சியர், கவனம் இல்லாமல் இவ்வாறு பேருந்தை இயக்கக் கூடாது என எச்சரித்து அறிவுரை வழங்கினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive