Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உதவிப் பொறியாளர் பணிக்கு வரும் 11-ல் நேர்காணல் தொடக்கம்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

        உதவிப் பொறியாளர் (சிவில்) தேர்வுக்கான நேர்காணல் வரும் 11-ல் தொடங்குகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

       உதவிப் பொறியாளர் (சிவில்) பிரிவில் 213 இடங்கள் காலியாகவுள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பரில் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் தேர்வு பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு-நேர்காணல் ஆகியன வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பிரிவில் 24 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இப்போது, சான்றிதழ் சரிபார்ப்புக்கு 57 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வு வரும் 27 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive