Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும்

       வங்கக் கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் காரைக்காலில் பலத்த, மிகப் பலத்த மழை நீடிக்கும். அதேநேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கோடி மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


           இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில், இலங்கை, வட தமிழகம் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நீடிக்கிறது. இந்த நிகழ்வின் காரணமாக, கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

 
பலத்த, மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு: அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, விழுப்புரம், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்புண்டு. சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாநகரில் ஓரிரு முறை மழை பெய்யவும் வாய்ப்புண்டு.


பலத்த மழை எச்சரிக்கை இல்லை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கோடி மாவட்டங்களுக்கு, பலத்த மழை எச்சரிக்கை இல்லை. இருப்பினும், மாநகரில் ஓரிரு முறை மழை இருக்கும். ஆனால், பலத்த மழை வாய்ப்பு இருக்காது. இதனால் பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. அதேபோன்று, தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் 3 நாள்களுக்கு பல இடங்களில் பலத்த மழை இருக்கும். வரும் செவ்வாய்க்கிழமை (டிச.8) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்யும் என்றார் எஸ்.ஆர்.ரமணன்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive