Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மையங்கள்அறிவிப்பு

     விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான செய்முறை தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


         வரும் 2016-ஆம் ஆண்டு வரும் ஏப்ரல் மாதம் பத்தம் வகுப்பு தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 19, 20, 26, 27 ஜனவரி 2 ஆகிய தேதிகளில் செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும், விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும், உளுந்தூர்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கும் தேர்வு நடைபெறும்.திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் திண்டிவனம் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளயில் மாணவிகளுக்கும், தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும், திருக்கோவிலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடைபெறும்.
கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும், சங்கராபுரம் அருகே தேவாண்டலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும், சின்னசேலம் அருகே கச்சிராயப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுககும் தேர்வுகள் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive