Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு தேதி மாற்றம்..

TNPSC DEPARTMENTAL EXAM PREPONED:மீலாது நபி: துறைத் தேர்வுகள் நாளை நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

         மீலாது நபி பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை நடைபெறவிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் புதன்கிழமை (டிச. 23) நடக்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

       மீலாது நபியையொட்டி, வியாழக்கிழமை காலை-மாலை என இரு வேளைகளிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த துறைத் தேர்வுகள், ஒரு நாளைக்கு முன்பாக புதன்கிழமையே (டிச. 23) நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 

 
          திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு, டிசம்பர் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

        இந்நிலையில், டிசம்பர் 24-ம் தேதி மிலாடி நபியையொட்டி, அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெற இருந்த தேர்வு ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை (டிச.23) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

            இதேபோல, டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தேர்வு எதுவும் இல்லை. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் டிசம்பர் 23-ம் தேதி நடைபெறும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்...





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive