Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மிலாது நபி: சென்னைப் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

     மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 24-இல் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 5-இல் நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 
       மிலாது நபியை கணக்கிடக் கூடிய பிறையானது டிச. 12-ஆம் தேதி தெரிந்தது. இதில் இருந்து 12-வது நாளான 24-ஆம் தேதியே மீலாது நபி கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு அரசு தலைமை காஜி சலாலுதீன் முகமது அயூப் கடிதம் எழுதியிருந்தார். 

இதையடுத்து, 23-ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுருந்த அரசு விடுமுறையை 24-ஆம் தேதிக்கு (வியாழன்) மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அன்றைய தினம் நடைபெற விருந்த தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் ஒத்திவைத்துள்ளன. இதேபோல், சென்னைப் பல்கலைக்கழகமும் டிசம்பர் 24-ஆம் தேதி நடக்க இருந்த இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive