Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போலியோ முகாம் 2016க்கு தள்ளிவைப்பு


தமிழகத்தில், மழை வெள்ள பாதிப்பால், டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய, போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், போலியோ நோயை ஒழிக்கும் வகையில், ஆண்டு தோறும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கம். 




ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர், ஜனவரி மாதத்தில், இம்முகாம் நடக்கும். தமிழகத்தில், இரண்டு கட்டமாக நடக்கும் முகாம்களில், மாநிலம் முழுவதும் உள்ள, 2.50 கோடி குழந்தைகளுக்கு, 46 ஆயிரம் மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.சமீபத்தில், பெய்த தொடர் மழை காரணமாக, பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இன்னும் ஒரு மாதமாகிவிடும். இந்த சூழ்நிலையில், முகாம் நடத்தினால், அவை வெற்றிகரமாக இருக்காது என்ற தகவல் அரசுக்கு சென்றது. 


மத்திய சுகாதாரத்துறையிடம், போலியோ முகாமை, ஒரு மாதம் தள்ளிவைக்குமாறு, தமிழக சுகாதார அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், ஜனவரி, 17ம் தேதியிலும், பிப்ரவரி, 21ம் தேதியிலும், போலியோ முகாம் நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive