Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அக்.8ல் பள்ளிகளை மூடி போராட்டம்

           பங்களிப்பு பென்ஷன் திட்டம் ரத்து, மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 8ல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும்,”என சிவகங்கையில் உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:


            முதல்வர் ஜெ., கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஆட்சிக்கு வந்தவுடன் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன் என்றார்.இன்று வரை ரத்தாகவில்லை .மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கான போக்குவரத்து, கல்வி, வீட்டு வாடகை படிகளை மத்திய அரசு போல் வழங்க வேண்டும். 2004ல் பகுதி நேரஆசிரியராக 55 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.அவர்களை 2006ல் அரசு பணிவரன்முறை செய்தது. ஆனால் பணி, பணப்பலன்கள் இன்று வரை கிடைக்கவில்லை.

கல்வித்துறையில்ஒப்பந்த அடிப்படையில் நியமித்த ஆசிரியரை பணிவரன் முறை செய்ய வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கையை முன்வைத்து, முதல்வரின் கவனத்தைஈர்க்கும் வகையில்,அக்டோபர் 8ம் தேதி தமிழகம் முழுவதும்3 லட்சம் ஆசிரியர்கள் பள்ளிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதற்கு பின்னரும் அரசு செவி சாய்க்காவிடில், தொடர் போராட்டம் நடக்கும், என்றார்.சங்க மாநில செயலாளர் சேதுசெல்வம், மாவட்ட செயலாளர் இளங்கோ உடனிருந்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive