இந்தியாவில் 68 ஆயிரம் கிராமங்களை இணைக்கும் வகையில் 90 ஆயிரம் கிலோ
மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிழை குழாய் பாதை கட்டமைப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர்
பிரசாத் தெரிவித்துள்ளார்.
இரண்டரை
லட்சம் கிராமங்களுக்கு அதிவேக இணையதள இணைப்பு அளிக்கும் திட்டத்தின் கீழ்
இந்தப் பணிகள் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.கடந்த 14 மாதங்களில் இந்த
பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முந்தைய ஆட்சியில் 2 ஆயிரம் கிலோ
மீட்டர் நீளத்துக்கு மட்டுமே கண்ணாடியிழை குழாய் பாதை
அமைக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அடுத்த ஆண்டுக்குள்
இரண்டரை லட்சம் கிராமங்களுக்கும் பாதை அமைக்கப்படும் என்றும் ரவிசங்கர்
பிரசாத் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...