தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கான குறைந்த பட்ச
காப்பீட்டுத்தொகை 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
ஹைதராபாதில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பிஎஃப் அறக்கட்டளையின் இம்முடிவால் 4 கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.பிஎஃப் சந்தாதாரர்கள், காப்பீட்டு பலனை பெற ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.கட்டுமானத் தொழிலாளர்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட நடைமுறையின் கீழ் கொண்டு வர விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...