Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை முள் வேலிக் குச்சியால் தாக்கி தலைமை ஆசிரியர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை, தலைமை ஆசிரியர் முள் வேலிக் குச்சியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் காளிதாஸ். தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் வீட்டுப்பாடம் சரியாக எழுதவில்லை எனக் கூறி, பள்ளியின் தலைமை ஆசிரியர் இவரை சரமாரியாக முள் வேலிக் குச்சியால் கொண்டு தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரின் தாயார் கூறும்போது, தனது மகன் கிட்னிப் பிரச்சனையால் அறுவை சிகிச்சை செய்தது தெரிந்தும், தலைமை ஆசிரியர் இவ்வாறு கொலை வெறியோடு தாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive