Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர்கள் கட்டாயம் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் படிக்கவைக்கவேண்டும் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு

       உ.பி., மாநிலத்தில் அரசு பணியிலுள்ளவர்கள் அனைவரும், தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என, அலகாபாத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உமேஷ் குமார் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுதிர் அகர்வால், உ.பி., மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும், தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்ப்பதன் மூலம் அரசுப் பள்ளிகள் நன்றாக இயங்கும் வாய்ப்புகள் உருவாகும்.


          அதை மீறி தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பினால், அப்பள்ளியில் அவர்கள் அளிக்கும் பீஸ் எவ்வளவோ, அவ்வளவு பணத்தை அரசு கருவூலத்துக்கு செலுத்த வேண்டும். மேலும் அரசின் மூலம் அவர்களுக்கு வழங்குப்படும் அனைத்து சலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.

இதுதொடர்பாக அடுத்த 6 மாதத்தற்குள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தலைமை செயலரிடம், அலகாபாத் ஐகோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.




15 Comments:

  1. பல நல்ல ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர் அவர்கள் மன்னிக்கவும் சில வீனா போன விளங்கம போன சிலர் சம்பள உயர்வுக்கு மட்டும் கொடி பிடிக்கிறார்கள் ஆனால் அவர்கள் பிள்ளை வருடத்திற்கு 1 லட்ச ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்கின்றர் 1 லட்சம் எப்படி வருது எல்லாம் லஞ்சம் அது வாங்க வழி இல்லாட்டா எதாவது ஒரு சங்கம் வச்சு வசூல் செய்றது. எவன் எப்படி போனா என்ன நம்ம பிள்ளைங்க நல்லா இங்கிலிஷ் ல பேசனும் கடைசி காலத்தில அவங்க பிள்ளைங்க கண்டிப்பா கஞ்சி ஊத்தாது பலரோட பாவம் சும்மா விடாது. இவங்களாம் எதற்கு அரசு வேலைக்கு வந்தாங்க இதுல இப்ப இருக்குற பொண்ணுங்க அரசு பள்ளி அரசு மருத்துவமணை , இப்படி எதையும் பயன்படுத்த மாட்டாங்களாம் ஆனா அரசாங்கத்துல வேலை பாக்குற மாப்பிளை தான் வேணுமாம் என்ன கொடுமை சார் இது........

    நல்ல தீர்ப்பு இந்த தீர்ப்பை அளித்த நீதி அரசர் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளார் .

    ReplyDelete
  2. Good Slab Mr. Karthick.... Entha Govt School teachers and HMs ku than entha arivupu.... should Announce in Tamilnadu also... vantha mattum enna seiya poranga..? athukum sethu porattam... nu kodi pudipanga.... epadi ellathukum porattam senji senji govt school appavi students thalila manni vaari poduranga... avanga pasanga private matric schools la padikeranga... avangaluku mattum unit test cycle test revision test ellam pakkava timela nadukuthu... aana govt schoolsla first workuku varathey ella... naalaikum sethu ennaikey attendance la present podurathu... classku porathella.... ponnalum onnum solikudukarathella... entha nelamai avanga pasangaluku vantha than eherium...

    ReplyDelete
  3. கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாட்களிலும், இரவு நேரங்களிலும் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. குடிகாரர்களின் அட்டகாசத்திற்கு பள்ளி வளாகம் பயன்படுகிறது. தமிழக முதல்வர் அம்மா இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம் (சுந்தர பெரிமாள் கோவில் வாசிகள்)

    ReplyDelete
  4. Good judgment

    ReplyDelete
  5. Karthik sir superb.. தமிழ் நாட்டுல சீக்கிரம் அவசரம் அவசியம் இந்த சட்டம் கொண்டு வரணும். அப்பவாச்சும் அரசு பள்ளிகள் நம்ம குழந்தைகள் படிக்கிற இடம் அப்படிங்கற எண்ணம் வந்து கற்பித்தல் சிறப்படையும்.
    -ஓர் அரசு பள்ளி ஆசிரியன்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Judge iyya, DEO,CEO,JD,Director avargalin pillagalai. Arasu palliyil searka sollungal.....

    ReplyDelete
  8. How many honest govt teacher's will follow this if this comes in TN...? Any willing govt teachers give reply with ur name and place of work... Can any one?

    ReplyDelete
  9. நல்ல தீர்ப்பு வழங்கிய நிதிமன்றதிற்கு நன்றி. இது போல தமிழகத்தில் நடை முறைபடுத்தினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  10. நல்ல தீர்ப்பு வழங்கிய நிதிமன்றதிற்கு நன்றி. இது போல தமிழகத்தில் நடை முறைபடுத்தினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive