Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் டிப்ளமோ: நாளை இரண்டாம் கட்டக் கலந்தாய்வு

      தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.7) நடைபெற உள்ளது. 
 
      இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஏற்கெனவே ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.இந்தக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் கலந்தாய்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இதற்காக அழைப்புக் கடிதம் தனியே அனுப்பப்படாது.


முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களும் இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்கலாம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள் போன்ற சிறப்பு பிரிவினராக இருப்பின் அதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றைக் கலந்தாய்வின் போது எடுத்துவர வேண்டும்

இதில் பங்கேற்க வரும் மாணவர்கள் The Director, SCERT, Chennai-6 என்ற முகவரியில் ரூ.3,500-க்கான கேட்பு வரைவோலையை (டி.டி.) சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive