முதுகலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்திட, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழகத்தில்
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, மே மாதத்தில்
நடைபெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு இதுவரை
நடத்தப்படாமல் இருப்பது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிப்பதாக
உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பல தலைமையாசிரியர் பணியிடங்களும்
மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் மாணவர்களின்
நலன் பாதிக்கப்படுகிறது. ஆகவே இந்த ஆண்டுக்கான கலந்தாய்வை நடத்தும்
பொழுது, 2015-16ம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளின்
பெயர்களையும் அறிவித்து, அதற்கு தோற்றுவிக்கப்படும் பணியிடங்களையும்
கருத்தில் கொண்டு , காலி பணியிடங்களை முறையாக அறிவித்து, முதலில் மேல்
நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம், மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிட
மாற்றம் என்ற முறையில், ஒளிவுமறைவின்றி, எவ்வித முறைகேடும் இல்லாத
வகையில், முதுகலை ஆசிரியர்களுக்ககான கலந்தாய்வை விரைவில் நடத்திட,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA)
தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
இங்ஙனம்
வே.மணிவாசகன்
மாநில தலைவர்
TNHSPGTA
ஆர்.செல்வம்,
மாநில செய்தி தொடர்பாளர்,
I am working as BT Asst. (Maths) in Department of Elementary Education’s Panchayat Union Middle School in MADURAI district near Madurai City. Those who willing for Mutual Transfer from TRICHY district to MADURAI district can contact my Mobile 8220631143.
ReplyDeleteI am working as BT Asst. (Maths) in Department of Elementary Education’s Panchayat Union Middle School in MADURAI district near Madurai City. Those who willing for Mutual Transfer from TRICHY district to MADURAI district can contact my Mobile 8220631143.
ReplyDeleteIs anybody willing mutual transfer from namakkal district to kiil kothagiri nilgiri district for the english Bt posting.please contact sathyapriya ph 9629019084.
ReplyDelete