Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'மேட்ரிமோனி'யிலும் ஆதார்

         மோசடிகள் நடக்காமல் தடுக்க, திருமண இணையதளங்களில் வரன் தேடி விளம்பரம் செய்வோர், ஆதார் எண்ணை தரும் வகையில், நடைமுறைகளில் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திருமண விளம்பரங்கள் தர எண்ணற்ற இணையதளங்கள் புற்றீசல் போல முளைத்து வருகின்றன. அவைகள், அதிக கட்டணம் பெற்று, வரன்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டாலும், மோசடி விளம்பரங்களை தடுக்க வகை செய்யவில்லை.

            இதனால், பல ஆண்கள், போலி திருமண தகவல்களை வெளியிட்டு, தம்மை ஏமாற்றி விட்டதாக புகார் அளிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இணையதளங்களில் திருமண விளம்பரங்கள் தருவோர், ஆதார் எண் அளிப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, 'டெய்டி' எனப்படும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை, திருமணம் தொடர்பான சேவைகளை அளிக்கும் இணையதளங்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டோர், கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது.

இணையதளங்களில், வரன் தேடி விளம்பரம் செய்யும் பெண்கள், ஏமாறாமல் தடுக்கவும், பொய் தகவல்களுடன் விளம்பரங்கள் தருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தக்க தொழில் நுட்பத்தை உருவாக்குவது குறித்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. திருமண விளம்பரங்கள் தருவோர், தமது ஆதார் எண் விவரங்களை அளிப்பதை கட்டாயமாக்குவது, 'டெய்டி'யின் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால், திருமண விளம்பரங்களில் ஆதார் எண்ணை கட்டாயமாக்க முடியாது என, இணையதளங்கள் கூறுகின்றன. இதுகுறித்து, 'ஜீவன்சாத்தி' திருமண இணையதளத்தின் தலைவர் ரோகன் மாத்துார், ஆதார் எண் தர விரும்பாத வாடிக்கையாளரை கட்டாயப்படுத்த முடியாது,'' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive