Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ் கற்கும் இத்தாலி மாணவர்கள்

       காரைக்குடி மானகிரி செட்டிநாடு பள்ளியில்,பிளஸ் 1 படிக்க இத்தாலி மாணவர்கள் வந்துள்ளனர்.இத்தாலி நாட்டைச் சேர்ந்த, மாணவர்களான மார்ட்டின்,17, லியானார்டோ,17 ஆகியோர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மானகிரி செட்டிநாடு பள்ளியில், இந்த ஆண்டு பிளஸ் 1-வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

         தமிழ்மொழியையும் சேர்த்து கற்கும் இவர்கள், நேற்று, பள்ளியில் நடந்த வித்யாம்பரம் நிகழ்ச்சியில், தமிழ் முதல் எழுத்தான, 'அ'-வை, அரிசியில் எழுதி தங்கள் படிப்பை தொடர்ந்தனர்.ஓராண்டு படிக்க இருக்கும் இந்த மாணவர்கள், பிளஸ் 1-ல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியில் பாடங்களுடன், ஆங்கிலம், தமிழ் மொழி ஆகியவற்றையும் கற்கின்றனர்.

மாணவர்கள் கூறியதாவது:நாங்கள், உயர்நிலை நான்காம் ஆண்டு படிப்பை, தமிழகத்தில் படிக்க வந்துள்ளோம். ஐந்தாம் ஆண்டு படிப்பை, இத்தாலியில் தொடர்ந்து படிப்போம். அமெரிக்கன் பீல்டு சர்வீஸ் - ஏ.எப்.எஸ். மூலம், இங்கு வந்துள்ளோம்.படிப்புடன் தமிழகத்தின் கலாசாரம், மொழி, பண்பாடு, கட்டடக்கலையையும் படிக்க உள்ளோம். எதிர்காலத்தில், ஆராய்ச்சியாளராகவும், பேராசிரியராகவும் வருவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive