Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் தான் ஆதிதிராவிடர்களுக்கு சிறந்தமுறையில் கல்வி புகட்டப்படுகிறது ஆதிதிராவிடர் ஆணையம் பாராட்டு

          ஆதிதிராவிடர் சமூதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியளிப்பதில்   தமிழகம் சிறந்து விளங்குவதாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின்  தலைவர் புனியா பாராட்டு  தெரிவித்துள்ளார்.  தேசி்ய ஆதிதிராவிடர்  ஆணையத்தின் தலைவர் புனியா தலைமையிலான குழுவினர் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளனர். 


          ஆதிதிராவிட சமூதாயத்தை சேர்ந்த எம்.பிக்கள் , எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து இந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர். 
சென்னை தலைமைசெயலகத்தில் மாநில அளவிலான ஆலோசனையையும் அவர்கள் நடத்தினர். இதன் பின்னர் ஆணையத்தலைவர் புனியா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

         தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலன்கள் குறித்த விவாதிப்பதற்காக வந்திருக்கிறோம். ஆதிதிராவிடர்நலத்துறை அமைச்சர் சுப்ரமணியம், தலைமை செயலாளர் 
ஞானதேசிகன், காவல்துறை டிஜிபி அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளை 
சந்தித்து பேசினோம். தமிழகத்தில் கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு 
துறைகளில் ஆதிதிராவிடர் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.  
ஆதிதிராவிடர் சமூதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் 
தமிழகம் சிறந்து விளங்குகிறது.

 தேசிய சராசரியை விட 7 விழுக்காடு கூடுதலாக தமிழகத்தில் ஆதிதிராவிட 
மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட பெண்களுக்கு கல்வி 
வழங்குவதிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பும்படி கேட்டுக்கொண்டோம். 
அதற்கான சிறப்பு ஆசிரியர் தேர்வு முகாமையே நடத்துவதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது.  
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive