Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை: தமிழக அரசு புதிய உத்தரவு

      நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 மேலும், நீச்சல் குளங்களுக்குச் செல்வோரிடம் இதய நோய் உள்ளிட்டவை இல்லை என்பதற்கான சுயசான்றினைப் பெற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
 நீச்சல் குளங்களை கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவுகள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:
 நீச்சல் குளம் தொடங்குவதற்கு முன்பாக அதற்கான முறையான அனுமதிகளைப் பெற வேண்டும். நீச்சல் குளம் தொடங்கவுள்ள இடம் தொடர்பாக பொதுப் பணித் துறையிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும். இந்தச் சான்றினை இணைத்து மாநகராட்சி-நகராட்சி ஆணையாளர் அல்லது பேரூராட்சி நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
 நீச்சல் குளத்தை கட்டி முடித்து, அதைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, மற்றொரு தடையின்மைச் சான்றினை ஆறு பேர் கொண்ட குழுவிடம் இருந்து பெற வேண்டும். சென்னையில் நகர காவல் ஆணையாளரும், மாவட்டங்களில் ஆட்சியரும் இந்தக் குழுவின் தலைவராக இருப்பர்.
 ஏற்கெனவே நீச்சல் குளங்களை வைத்திருப்பவர்கள் இப்போது வரையறுக்கப்பட்ட விதிகளை இரண்டு மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். அடுத்த ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி - நகராட்சி ஆணையாளர்கள் அந்தக் குளத்தை ஆய்வு செய்து சான்றினை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நீச்சல் குளத்தை பயன்படுத்த முடியாது.
 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள்: உயிர் காக்கும் அம்சங்கள் குறித்தும், சுகாதார விதிகள் பற்றியும் நீச்சல் குளத்தின் அறிவிப்புப் பலகையில் குறிப்பிட வேண்டும். தீயணைப்புக் கருவிகளை பொருத்த வேண்டும்.
 பெண்களுக்கு பாலியியல் தொல்லை கொடுக்க அனுமதிக்கக் கூடாது. புதிதாக நீச்சல் பழகுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிவப்புத் தொப்பி அளிக்க வேண்டும். அவசர கால உதவி எண்களை அனைவரும் பார்க்கும்படி வைக்க வேண்டும்.
 பள்ளிகளில் நீச்சல் குளங்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் இரவு 9 மணிவரை பயன்படுத்தலாம்.
 நீச்சல் குளங்களை 8 வயது உள்பட்ட மற்றும் 121.6 சென்டி மீட்டர் உயரத்துக்கு குறைவாக இருக்கும் குழந்தைகள் தனியாக பயன்படுத்தக் கூடாது. பெற்றோர்கள் கண்காணிப்பில் அவர்களை அனுமதிக்கலாம். பள்ளிகளில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் ஒப்புதலுடன் நீச்சல் குளத்தில் குழந்தைகளை அனுமதிக்கலாம்.
 இதய நோய், தோல் நோய் போன்றவை இல்லை என்பதற்கான சுயசான்றினை நீச்சல் குளத்தை பயன்படுத்த விரும்புவோரிடம் இருந்தும், கல்வி நிலையங்களில் என்றால், மருத்துவரிடம் இருந்தும் சான்றினைப் பெற வேண்டும்.
 நீச்சல் செய்யும் போது அதற்கான உடையை அணியாதோர், குடி போதையில் இருப்போர், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்போரை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive