Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேளாண்மை கலந்தாய்வு: 644 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 16-ஆம் தேதி தொடங்கியது. இக்கலந்தாய்வு தொடர்ந்து 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.
        வேளாண்மை, தோட்டக்கலை படிப்பு பயில மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஏராளமான விண்ணப்பங்களும் குவிந்துள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தலைமை வகித்து, கலந்தாய்வைத் தொடங்கி வைத்தார். மேலும், மாணவர்களின் சேர்க்கை கடிதத்தையும் அவர் வழங்கினார்.

அண்ணமாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பில் சேர மொத்தம் 11,053 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் 644 விண்ணப்பங்கள் தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டன. தகுதி பெற்ற விண்ணப்பங்களாக 10,409 தேர்வு செய்யப்பட்டன. இதில் 29 பேர் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள்.
தகுதி பெற்ற விண்ணப்பங்களுக்கு ஜூலை 10ம் தேதி சமவாய்ப்பு எண் (ரேண்டம் நம்பர்) வெளியிடப்பட்டது. பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்பில் 1,000 பேரும், பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்பில் 70 பேரும் பல்கலைக்கழகத்தில் படிப்புக்குச் சேர்க்கப்படவுள்ளனர். கூடுதல் தகவல்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive