Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போலிச் சான்றிதழ்: தில்லி சட்டத்துறை அமைச்சர் கைது.

              தில்லி சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டோமர் போலி பட்டப் படிப்பு  சான்றிதழ் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆம் ஆத்மி கட்சியின் சட்டத்துறை அமைச்சரான ஜிதேந்திர சிங் டோமர் சட்டம் பயிலாமலேயே, சட்டப் படிப்பிற்கான சான்றிதழ் வைத்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் புகார் எழுந்தது. 

         அதன் பிறகு, பிகார் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்புக்கான பட்டம் பெற்றதாக ஜிதேந்திர சிங், போலி சான்றிதழ் வைத்துள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிகார் பல்கலைக்கழகம், தங்கள் பல்கலைக்கழகத்திலிருந்து அவர் பட்டம் பெறவில்லை என்று விளக்கம் அளித்திருந்தது. ஜிதேந்திர சிங் வைத்துள்ளது போலி சான்றிதழ் என்று கூறியுள்ள பல்கலைக்கழகம், அவரின் பட்டச் சான்றிதழில் காணப்படும் வரிசை எண் வேறொரு நபருக்கு சொந்தமானது எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இன்று நடைபெற்ற விசாரணையில் தில்லி சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டோமர் போலியான பட்டப் படிப்பு சான்றிதழ் கொடுத்தது நிரூபிக்கப்பட்டது. அதன்படி, தில்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive