Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

‘வனவர்’ எழுத்துத்தேர்வு முடிவுகள் எப்போது?

       தமிழகத்தில், முதன்முறையாக, வனத்துறைநடத்திய, ’வனவர்’ எழுத்துத் தேர்வுகளுக்கான முடிவுகள், எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில், வனத்துறையில்,  வனவர்களாக பணியில் சேருவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்வுகளை நடத்தி வந்தது. ’தங்களது துறைக்குத் தேவையான வனவர்களை, தாங்களே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என, மாநில அரசை, வனத்துறை வலியுறுத்தியது.அதைத் தொடர்ந்து, அதற்கான அனுமதியை, தமிழக அரசு வழங்கியது.
 
         அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, தேர்வை எழுத அனுமதிப்பது என, முடிவு செய்யப்பட்டது.
அதன்பின், கடந்த பிப்., 22ல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில்,’வனவர்’ பணிக்கான எழுத்துத் தேர்வு நடந்தது; 35 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.ஆனால், தேர்வு நடந்து, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், முடிவுகள் வெளிவராததால்,தேர்வெழுதிய மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ’தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்’ என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive