Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியீடு : டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

      துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகள் அடங்கிய குரூப் 1 தேர்வுக்கான முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார்.
 
        தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் (காலி பணியிடம் 3), போலீஸ் டி.எஸ்.பி. (33), வருமானவரித் துறை உதவி ஆணையர் (33), ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (10) ஆகிய 79 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை எழுத்து தேர்வை கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி நடத்தியது. மொத்தம் 70,547 பேர் எழுதினர். விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் பிற விதிகள், உயர் நீதிமன்ற ஆணையின்படி 4,282 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு ஜூன் 5, 6, 7ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதன்மை தேர்வு தொடங்கியது.

சென்னையில் மட்டும் 43 மையங்களில் தேர்வு நடந்தது. ஒவ்வொரு ஹாலுக்கும் 10 பேர் வீதம் ஒரு மையத்திற்கு 100 பேர் என்று முதல்தாள் தேர்வு எழுதினர். ஒவ்வொரு மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர். பின்னர், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் அளித்த பேட்டி: குரூப் 1 முதன்மை தேர்வில் பொது அறிவு முதல்தாள் 80 சதவீதம் பேர் எழுதியுள்ளனர். இன்று பொது அறிவு இரண்டாம் தாளும், நாளை மூன்றாம் தாள் தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 2 மாதத்தில் வெளியிடப்படும். அதன் பின்னர் நேர்முக தேர்வு நடைபெறும்.

கோர்ட் உத்தரவுப்படி ஊனமுற்றவரான ரமேஷ் என்பவருக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற ஊனமுற்றவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இதே போல பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். உதவி இன்ஜினியர் பணியில் 98 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 27.7.14 அன்று நடந்தது. இதற்கான ரிசல்ட் விரைவில் வெளியிடப்படும்.  இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive