Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமையாசிரியர்களுடன் மேயர் ஆலோசனை

         பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து தலைமையாசிரியர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்தது. இதனால் மாநகராட்சி கல்வித் துறை மீது குறை கூறப்பட்டு வந்தது.

        இந்த நிலையில், தேர்ச்சி விகிதம் குறைவுக்கான காரணம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் 32 மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
 இது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியது: இந்தக் கூட்டத்தில் தற்போது கற்பிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இனி வரும் ஆண்டுகளில் கற்பிக்கும் முறையில் மாற்றம் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு படித்த மாணவர்களுக்கு பழைய வினாத்தாள்களில் கேள்விகளை படிக்கவே அதிகம் ஊக்குவிக்கப்பட்டது. அதனால் பலர் தேர்ச்சி பெற முடியவில்லை. வரும் ஆண்டில் வினா வங்கிகள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive