Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலை, அறிவியல் கல்லூரிகளை ஒரே நாளில் திறக்க உத்தரவு

        தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளை ஒரே நாளில் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 83 அரசு கல்லூரிகள், 165 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 350க்கும் மேற்பட்ட சுய நிதி கல்லூரிகள் உள்ளன.
 
          காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி மட்டுமின்றி, பெரும்பான்மை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேர்வு இன்றுடன் முடிகிறது. கோடை விடுமுறைக்கு பின்பு,அனைத்து கல்லூரிகளையும்,ஜூன் 18ம் தேதி ஒரே நாளில் திறக்க கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்னேற்பாடாக அரசு கல்லூரிகள், மாணவர் சேர்க்கையை இந்த மாத கடைசிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக கல்லூரிகளில், கடந்த 4ம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு கல்லூரிகளில் மே 25ல் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். மாணவர்கள் அவர்களுடைய மதிப்பெண் பட்டியல் நகலில், தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் தனியார் கல்லூரிகள், முன்கூட்டி மாணவர் சேர்க்கையில் ஈடுபடும். அரசு கல்லூரிகளை பொறுத்தவரை, கல்லூரி தொடங்கிய பிறகே மாணவர் சேர்க்கையை நடக்கும். தற்போது இம்மாத கடைசிக்குள் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் சுயநிதி கல்லூரிகள் தற்போதே மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளன. ஒரே நாளில் கல்லூரி தொடங்க உள்ளதால் இறுதி வேலை நாளை மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் கல்லூரிகளே கணக்கிட்டு முடிவு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive