Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'இ சேவை' மையங்கள் முடக்கம்: சான்றிதழ்கள் வழங்குவதில் சிக்கல்

             தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக 'இ சேவை' மையங்கள் இயங்காமல் முடங்கியதால், மாணவர்களுக்கு சான்றிழ்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 கலெக்டர் அலுவலகங்கள், 254 தாலுகா அலுவலகங்களில் 'இ சேவை' மையங்கள் செயல்படுகின்றன.
 
           இதில் 18 மையங்கள் 'எல்காட்' நிறுவனம் மூலமாகவும், மற்ற மையங்கள் அரசு 'கேபிள் டிவி' மூலமாகவும் செயல்படுகின்றன. இம்மையங்களில் வருமானம், ஜாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றுகள் வழங்கப்படுகின்றன. மேலும் பெண் குழந்தை பாதுகாப்பு, திருமண நிதியுதவி போன்ற திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். சேவைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐந்து நாட்களாக 'சர்வர்' பிரச்னையால் இசேவை மையங்கள் அனைத்தும் இயங்காமல் முடங்கியுள்ளன. இதனால் ஜாதி, இருப்பிடம் போன்ற சான்றிதழ்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்களிலும் சான்றிதழ்கள் தர மறுப்பதால் பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர் விஜயகுமார் கூறுகையில், " இ சேவை' மையங்கள் முடங்கியதால் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. அதுவரை தாலுகா அலுவலங்கள் மூலம் சான்றுகள் வழங்க வேண்டும்,” என்றார்.
சேவை மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'சர்வர்' பிரச்னையால் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க முடியவில்லை.சென்னை தலைமை அலுவல கத்தில் தகவல் தெரிவித்து விட்டோம். விரைவில் சரி செய்து விடுவதாக கூறியுள்ளனர். அதுவரை விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 'டோக்கன்' தருகிறோம், என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive