Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடர்கிறது அரசு பள்ளிகளின் வீழ்ச்சி தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்து உள்ளது.

       தமிழகத்தில், நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளின் மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்து வருவது தெரியவந்து உள்ளது. 
 
        தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்து உள்ளது. மாவட்ட அளவில்கூட அரசு பள்ளி களின் மாணவர்கள் ரேங்க் பெறவில்லை என்பது பெற்றோரை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் முதல் இடத்தை வழக்கம் போல் மாணவியரே பிடித்தனர். திருப்பூர் பவித்ரா மற்றும் கோவை நிவேதா ஆகியோர் 1,192 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றனர். கடந்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி 1,193 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதலிடத்துக்கான மதிப்பெண் குறைந்துள்ளது. இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை ஈரோடு, நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் பெற்று உள்ளனர். மூன்றாம் இடத்தை நாமக்கல் மாணவி பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டப் பள்ளிகள் அதிக அளவில் மாநில 'ரேங்க்' பிடித்து வருகின்றன. இந்த ஆண்டும் அதேநிலை தொடர்கிறது. இதேபோல் பாட வாரியான முதல் மூன்று இடங்களிலும் இந்த மாவட்டங்களின் ஆதிக்கம் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 24; சேலம், 16; ஈரோடு 16; கோவையில் 15 பேர் என முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். பிற மொழிப் பாடங்களில் சென்னை முன்னிலையில் இருந்தாலும் தமிழ் வழியில் குறிப்பிட்ட மாவட்டங்களின் பள்ளிகளே மீண்டும் மீண்டும் முதலிடங்களைப் பிடித்துள்ளன. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, மதுரை, திருச்சி, விருது நகர் போன்ற மாவட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு முன் வரை பொதுத் தேர்விலும் தேர்ச்சியிலும் முன்னிலை பெற்றன.




8 Comments:

  1. அரசு பள்ளிகளில் 9,ஆம் வகுப்பிலும், 11ஆம் வகுப்பிலும் பாடம் நடத்துகிறார்கள்.தனியார் பள்ளிகளோ, 9ஆம் வகுப்பில் 10ஆம் வகுப்பு பாடங்களும்,11ஆம் வகுப்பில் 12ஆம் வகுப்பு பாடங்களையும் நடத்துகின்றார்கள்.தனியார் பள்ளி மானவர்கள் 10ஆம் வகுப்பு,12ஆம் வகுப்புகளை இரண்டு வருடங்கள் படிக்கின்றார்கள் ..அவர்கள் முதலிடம் வருவதில் ஆச்சரியமில்லை.பெற்றோரும் கண்டு கொள்ளாத அரசுப்பள்ளி மாணாவர்கள் இந்த அளவிற்கு தேர்ச்சி பெற்றதே சாதனைதான்.

    ReplyDelete
  2. அரசு பள்ளிகளில் 9,ஆம் வகுப்பிலும், 11ஆம் வகுப்பிலும் பாடம் நடத்துகிறார்கள்.தனியார் பள்ளிகளோ, 9ஆம் வகுப்பில் 10ஆம் வகுப்பு பாடங்களும்,11ஆம் வகுப்பில் 12ஆம் வகுப்பு பாடங்களையும் நடத்துகின்றார்கள்.தனியார் பள்ளி மானவர்கள் 10ஆம் வகுப்பு,12ஆம் வகுப்புகளை இரண்டு வருடங்கள் படிக்கின்றார்கள் ..அவர்கள் முதலிடம் வருவதில் ஆச்சரியமில்லை.பெற்றோரும் கண்டு கொள்ளாத அரசுப்பள்ளி மாணாவர்கள் இந்த அளவிற்கு தேர்ச்சி பெற்றதே சாதனைதான்.

    ReplyDelete
  3. NO SLOW LEARNERS ADMITTED IN PRIVATE SCHOOLS.THAT IS THE MAIN REASON TO SCORE BETTER THAN GOVT SCHOOL

    ReplyDelete
  4. கடந்த ஆண்டு தினமணியில் “நாமக்கல்(வி)சாதனை“ என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வந்திருந்தது அதை மறுத்து, நான் எழுதிய கட்டுரை “தனியார் பள்ளிகள் சாதனை - பின்னணி என்ன?” எனது தளத்தில் வந்துள்ளது -http://valarumkavithai.blogspot.com/2013/06/blog-post.html நேரமிருந்தால் படித்துப் பார்த்து இந்தச் செய்திக்கான எனது மறுப்பாக வெளியிட வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
  5. அரசு பள்ளிகளில் 9,ஆம் வகுப்பிலும், 11ஆம் வகுப்பிலும் பாடம் நடத்துகிறார்கள்.தனியார் பள்ளிகளோ, 9ஆம் வகுப்பில் 10ஆம் வகுப்பு பாடங்களும்,11ஆம் வகுப்பில் 12ஆம் வகுப்பு பாடங்களையும் நடத்துகின்றார்கள்.தனியார் பள்ளி மானவர்கள் 10ஆம் வகுப்பு,12ஆம் வகுப்புகளை இரண்டு வருடங்கள் படிக்கின்றார்கள் ..அவர்கள் முதலிடம் வருவதில் ஆச்சரியமில்லை.பெற்றோரும் கண்டு கொள்ளாத அரசுப்பள்ளி மாணாவர்கள் இந்த அளவிற்கு தேர்ச்சி பெற்றதே சாதனைதான்.

    ReplyDelete
  6. You all said are correct further..In matric school Teachers do anything for the students progress but in the Govt schools students can do anything without obeying the teachers (not all students) in all ways. Govt school and teachers are the best private schools achievements are not equal to Govt smools..... Can any Private school admit any MR or ADD or Dslexic students for their progress like GovT Schools? Truly the answer will be never so Govt schools are the Greatest of great..... Private schools nothing. before Govt schools...so pls change your mentalities....

    ReplyDelete
  7. பெங்களுர் டெல்லி போன்ற நகரங்களில் இருந்து நீட் தோ்வுக்கென தரமான பத்திரிகைகள் வெளியாகின்றது.பல இணைய தளங்கள் உள்ளன. முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் அனைவரும் மேற்படிபத்திரிகைகள் வாங்கிப் படிக்க வேண்டும். மேலும் FOUNDATION COURSE என்று ஏராளமான புத்தகங்கள் கிடைக்கும். ஆங்கில புத்தகங்களை வாங்கி படித்து 6ம் வகுப்பு முதல் அறிவியல் கணிதம் பாடங்களில் நுணுக்கமான புரிதலை சோதிக்கும் வினாக்களை மாணவர்களிடம் கேட்டு அவர்களின் புலமையை வளா்க்க வேண்டும். அதற்கான பாட வகுப்பு வாரி வினா வங்கி ஏற்படுத்த வேண்டும்.பாடசாலை செயயலாம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive