Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு தோட்டக்கலை அலுவலர் பணிக்கு ஜூன் 1 முதல் நேர்முகத் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

           தோட்டக்கலை அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஜூன் 1 முதல் 4-ம்  தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. 
          இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 தோட்டக்கலை அலுவலர் பதவியில் 183 காலிப் பணியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு நேர்முகத்தேர்வுக்கு 361 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முகத்தேர்வு ஜூன் 1 முதல் 4-ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். இதற்கான அழைப் புக்கடிதம் சம்பந்தப்பட்ட விண்ணப் பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அழைப்புக் கடிதத்தையும் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் பட்டதாலேயே அவர்கள் பணிக்கு தகுதி பெற்றுவிட்டதாக கருத முடியாது. குறிப்பிட்ட நாளில் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளத் தவறினால் அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு ஏதும் வழங்கப்பட மாட் டாது. இவ்வாறு விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive