Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10-ம் வகுப்பில் 50 சதவீத மாணவர்கள் தோல்வி: மத்திய பிரதேசத்தில் தொடரும் அவலம்

         மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம் 11 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 49.7 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 50.3 சதவீத மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.

         கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளாகவே இந்த அவலம் தொடர்ந்து வருகிறது. 2011-ம் ஆண்டு 55 சதவீதம் பேரும், 2012-ல் 51.19 சதவீதம் பேரும், 2013 மற்றும் 14-ம் ஆண்டுகளில் 47.74 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்தனர்.
 
               1-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சியடையச் செய்வதாலே 10-ம் வகுப்பில் இவ்வளவு பேர் தோல்வியடைவதாக ஆசிரியர்கள் குறை கூறுகிறார்கள். மோசமான தேர்வு முடிவுகளின் எதிரொலியாய், மத்திய பிரதேசத்தில் 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் 60 ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர்கள் தினசரி சம்பள அடிப்படையில் வேலை செய்வதும் குறிப்பிடத்தக்கது.




1 Comments:

  1. சரியான முறையில் தேர்வுகளை நடத்தினால் இங்கயும் அவ்வளவு தாங்க வரும்...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive