Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரி தொடர் போராட்டம்

அனைத்து சகோதர / சகோதரிகளுக்கும் வணக்கம்...
 
      தமிழக அரசின் ஆதிதிராவிட / கள்ளர் சீரமைப்பு நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2013 ம் ஆண்டுதான் சுமார் 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதிதிராவிடநலப்பள்ளிகளிலும் சுமார் 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கள்ளர் நலப்பள்ளிகளிலும் அந்தந்த சமூகத்தினற்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. 

         ஆனால் வழக்கு காரணமாக நமக்கான உரிமையை பெற விடாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கினை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியமும் நலத்துறையும் நமக்கான உரிமையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனையாக உள்ளது. இதனால் நாமும் கடந்த ஆறு மாதமாக அமைதியான முறையில் நமது கோரிக்கையை மனுவாகவும் உண்ணாவிரத போராட்டம் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் நமது உரிமையை பெற இயலவில்லை. ஆனால் இதே நாளில் வெளியான பள்ளிகல்வித்துறை பணியிடங்களை மட்டும் நிரப்பியுள்ளனர். அதற்கும் வழக்கு தொடரப்பட்ட போது அரசு உடனடியாக வழக்கினை முடித்து பணியமர்த்தினர். ஆனால் நமது வழக்கினை கண்டுகொள்ளவில்லை எனும் அரசின் நிலைப்பாடு வருத்தப்படவைக்கிறது. ஆகையால் தோழர்களே விழித்தெழுங்கள் காலம்கடந்து செல்லும்முன் உரிமையை பெற ஒன்று கூடுங்கள். அலட்சியம் நம்மளை படும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பது உண்மை. தோழர்களே வரும் திங்கள் (23.03.2014) முதல் நமது உரிமையை பெற தொடர் போராட்டம் செய்வோம் அனைவரும் சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் ஒன்று கூடுங்கள் .... நமது உரிமையை பெற்று தரும்வரை போராட்டம் நடத்துவோம்.. அனைவரும் ஆதரவும் தங்களின் பங்களிப்பும் வழங்க வேண்டும். இந்த போராட்டம் நமது இறுதி கட்ட முயற்சி வெற்றி பெறாமல் திரும்புவது இல்லை என்ற முடிவோடு வாருங்கள்.அரசு வழக்கறிஞர் ஆஜராகி நமது உரிமையை நிலைநாட்ட கோரிக்கை விடுப்போம். அரசு நமக்காக அறிவித்த பணியிடங்களை நமக்கு அளிக்க அதுவும் விரைந்து அளிக்க கோரிக்கை விடுப்போம். நமது நோக்கம் அரசினை நமது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டு நமது பணிநியமனத்தினை நமக்கே உறுதிபடுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்பதேயாகும். ஒவ்வொருவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
அனைவரும் வருக! ஆதரவு தருக!

இப்படிக்கு,
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (SC&SCA மற்றும் பிரமலை-கள்ளர்) இடைநிலை ஆசிரியர்கள்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு :-
ஜெகநாதன் மதுரை – 9442880680
ஹரிகிருஷ்ணன் ராமநாதபுரம் –
மதன்பாண்டி மதுரை- 9865966398, 9629954949
ரமேஷ் நாமக்கல்-9942015830
சிவபிரகாஷ் கோவை –7708058814
பழனி திருவண்ணாமலை-9524805873




3 Comments:

  1. Paadařalai admin thanks.chennai il santhippom nanbarakaley

    ReplyDelete
  2. போர்குணமிக்க ஆசிரியர் சகாக்களை சிங்கார சென்னை அன்புடன் அழைக்கப்படுகிறது..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  3. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 669 பணியிடம் என்பது தோராயமானது. 2014 மே 31 என்ற தேதியின் அடிப்படையில் பார்த்தால் 1000 த்தை தாண்டும். போராட்டத்தில் 2015 மே 31 ஆம் தேதி அடிப்படையில் காலிப்பணியிடங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் பணிநியமனம் நடைபெற வேண்டும் என நிபந்தனை வையுங்கள்.

    எனக்கு தெரிந்த வரையில் ஆதிந பள்ளியில் பணியாற்றும் ஒரு இ நி ஆசிரியர் 20 நாட்களை வேலை நாட்களாக கொண்ட ஒரு மாதத்தில் 5 நாட்கள் தான் அவருடைய பள்ளியில் பணிபுரிகிறார் மீதம் உள்ள 15 நாட்களை மாற்று பணியாக பல்வேறு பள்ளிகளுக்கு செல்கிறார். இப்படி இருந்தால் அவருடைய பள்ளி மாணவர்களின் கல்வி நிலை என்னவாகும் என்பதை அரசு தான் கூற வேண்டும். அவ்வளவு காலிப்பணியிடம் உள்ளது. இதற்கு இறைவன் தான் தீர்வு காண வேண்டும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive